
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு அருகே தனக்கென ஒரு சமாதியை கட்டி வைத்துள்ளார் பங்காரு அடிகளார்.
இந்த நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவருடைய உயிர் பிரிந்தது. இதை அறிந்த ஏராளமான செவ்வாடை பக்தர்கள் வந்துள்ளனர். பெண்கள், ஆண்கள் என கண்கலங்கி வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே கோயிலுக்கு அருகே தனக்கென சமாதியை கட்டினார் பங்காரு அடிகளார்.
