
லண்டனில் படமாக்கப்பட்ட சில நொடிகளில் விமர்சனத்தை சற்றே பார்க்கலாம்,
ஆங்காங்கே லண்டனின் சில காட்சிகளை நமக்கு காட்டுகின்றன அதிலும் குறிப்பாக அங்கு தமிழ் பேசும் படமாக அமைந்தது படத்திற்கு எதார்த்தத்தை கொடுத்தது.
லண்டனில் மனைவியுடன் வசிக்கிற, சொந்தமாக மருத்துவனை வைத்துள்ள, பிளாஸ்டிக் சர்ஜரியில் எக்ஸ்பர்ட்டான அந்த இளைஞன் தன் கள்ளக் காதலியின் திடீர் மரணத்துக்கு காரணமாகிவிடுகிறான். யாருக்கும் தெரியாதபடி அவளது சடலத்தை அப்புறப்படுத்தி விடுகிறான். ஒரு கட்டத்தில் அவன் செய்த அந்த குற்றச் செயலை ஒரு பெண் கண்டுபிடித்து பணம் கேட்டு அவனை மிரட்டுகிறாள். இந்த விவகாரம் அவனுடைய மனைவிக்கும் தெரியவருகிறது.அவன் கொலையாளி என்ற விவரம் அவனை மிரட்டும் பெண்ணுக்குத் தெரிந்தது எப்படி? கணவன் கொலையாளி என்பது தெரிந்த அவனது மனைவி என்ன செய்தாள்? தன்னைச் சூழ்ந்த சிக்கல்களிலிருந்து அவன் மீண்டு வர முடிந்ததா, இல்லையா? இந்த கேள்விகளுக்கு பதில் தருகிறது திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை. இயக்கம் வினய் பரத்வாஜ்
