
சைத்ர விமர்சனம்:
விபத்தில் சிக்கி இறந்த தனது தோழி மற்றும் அவரது கணவர் மரணத்தை நேரில் பார்க்கும் நாயகி யாஷிகா ஆனந்த், அன்று முதல் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதோடு, விபத்தில் இறந்த அந்த இருவரும் தன்னை தேடி வருவதாகவும், அவர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்றும் புலம்பிக் கொண்டிருக்கிறார். இதனால் தனது மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைக்கும் அவரது கணவர் அவிதேஜ், மனநல மருத்துவர் ஆலோசனைப்படி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார். இதற்கிடையே, தனது நண்பருக்காக வீட்டை விட்டு வெளியே செல்லும் அவிதேஜ், தனது மனைவிக்கு போன் செய்யும் போது அந்த போனை அவர் எடுக்காமல், அவரை தேடி வரும் இறந்துபோன அவரது தோழி எடுக்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் யாஷிகா ஆனந்தின் கணவர் தனது மனைவி சொல்வது போல் இறந்தவர்கள் அவரை தேடி வருவது உண்மை தான் என்று நம்புவதோடு, அந்த பேய்களை விரட்ட தனது நண்பரிடம் சொல்லி சாமியார் ஒருவரை அழைத்து வர சொல்கிறார்.
மொத்தத்தில் பேய் ஜெயித்த இல்லையா என்பது தான் கதையின் மீதி பாகம்
