2024 ஆம் ஆண்டிற்கான மிஸ் அண்ட் மிஸஸ் கோல்டன் பேஸ் ஆப் சவுத் இந்தியா

2024 ஆம் ஆண்டிற்கான மிஸ் அண்ட் மிஸஸ் கோல்டன் பேஸ் ஆப் சவுத் இந்தியா அழகி போட்டியில் வெற்றி பெற்ற அமால்,வர்ஷினி, மேகா ராஜீவ், ஜாக்லின் சோபியா, நிவேதா அருண்பிரசாத்  இவர்களுடன் திரு. கோபிநாத்  கலந்து கொண்டு தோல் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

 விண்டோ எண்டர்டெயின்மென்ஸ் நிறுவனர்கள் கோபிநாத் ரவி மற்றும் சரவணன் ஆகியோர் ஏ சி டி சி ஸ்டுடியோ நிறுவனர் ஹேம்நாத் உடன் இணைந்து கோல்டன் பேஸ் ஆப் சவுத் இந்தியா 2024 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் எமி ஜாக்சன் மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கிரீடம் அணிவித்தனர். இவர்களுடன் இயக்குனர் ஏ எல் விஜய் கோல்டன் பேஸ் ஆப் சவுத் இந்தியா போட்டியின் பிராண்ட் அம்பாசிடர் பார்வதி நாயர் ஆகியோரும் தலைமை விருந்தினர்களாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இந்த போட்டியில் பங்கு பெற பதிவு செய்திருந்த நிலையில், 51 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். அழகு கலை, ஒய்யார நடை, மற்றும் கேள்வி பதில் சுற்றுகளில் பங்கேற்ற இவர்களில் அமால் ஷாஜகான் மிஸ் கோல்டன் பேஸ் ஆப் தமிழ்நாடு பட்டத்தை தட்டிச் சென்றார். ஜாக்லின் சோபியா மிஸஸ் கோல்டன் பேஸ் ஆப் தமிழ்நாடு பட்டத்தை வென்றார். நிவேதா அருண்பிரசாத் மிஸஸ் கோல்டன் ஃபேஸ் ஆப் சென்னை பட்டத்தையும், மேகா ராஜீவ் மிஸஸ் கோல்டன் ஃபேஸ் ஆப் சவுத் இந்தியா போட்டியில் இரண்டாவது இடத்தையும், வர்ஷினி வெங்கட், மிஸ் கோல்டன் பேஸ் ஆப் சவுத் இந்தியா போட்டியில் மூன்றாவது இடத்தையும் தக்க வைத்தனர்.

வெற்றி பெற்ற இவர்கள் அனைவரும் இணைந்து ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post உலக சிறுதானிய ஆண்டை முன்னிட்டு 5000 பள்ளி மாணவ மாணவிகள் ஒரு நிமிடத்தில் சிறுதானியத்தை விதைத்து உலக சாதனை
Next post டத்தோஸ்ரீ”ஜி என்கிற டிஎஸ்ஜி ராஜா அவர்களுக்கு கிடைத்த பன்னாட்டு அங்கீகாரம்!
Close
%d bloggers like this: